இன்று (9) மாலை 4 மணி வரை, கூரையில் சூரிய மின்கல சக்தி பயன்படுத்துபவர்கள் தேசிய மின் கட்டமைப்பிலிருந்து தங்கள் இணைப்புகளை துண்டிக்குமாறு மின்சக்தி அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனுடன், இலங்கை தேசிய நீர்வடிகாலமைப்பு சபை (NWRDB) பொதுமக்களிடம் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டு, மின்சார விநியோகம் மீண்டும் வழமைக்கு திரும்பும் வரை இந்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நாடு முழுவதும் மின்விநியோகம் பாதிக்கப்பட்ட நிலையில், மின்சார சபை ஊழியர்கள் மீண்டும் வழமையான நிலைக்கு மின் விநியோகவை கொண்டுவர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




