கரீபியன் கடலில் நிலநடுக்கம்! – சுனாமி எச்சரிக்கை!

Date:

கரீபியன் கடலில் 7.6 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது, கேமன் தீவுகளின் தென்மேற்கில் சுமார் 209 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி நேற்று மலை 6.23 மணிக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தையடுத்து, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) மற்றும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC) சில கரீபியன் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளன. கேமன் தீவுகள், ஜமைக்கா, கொலம்பியா, போர்ட்டோ ரிக்கோ போன்ற நாடுகள் இந்த எச்சரிக்கையின் கீழ் உள்ளன.

சுனாமி எச்சரிக்கை காரணமாக, கடற்கரை பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் வழிமுறைகளுக்கு உள்ளூர் அதிகாரிகளின் அறிவிப்புகளை கவனிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்

மேற்கு வங்கத்தின் முதல் பாஜக முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். கொல்​கத்​தா​வின் பிரி​கேட்...

‘விஜய் ஆட்சி அமைத்தால் தமிழகத்துக்கே பேரழிவு’ – டிடிவி தினகரன் காட்டம்

“முதல்வராகி ஊழலை ஒழிப்போம் என்று சொல்பவர்கள், முதல்வராகவே ஃபோர்ஜரி செய்கிறார்கள். ஒரு...

யாழ் போதனா வைத்தியசாலையில் தீ

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09) அதிகாலை வேளையில் தீ பரவல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்