இன்று (06) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்த அரசாங்கத்தை வலியுறுத்தி கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி அவர் இந்தக் கோரிக்கையை எழுப்பியிருந்த நிலையில், அண்மைக்காலமாக அரசாங்கம் இது தொடர்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி தெளிவான பதிலை எதிர்க்கட்சித் தலைவர் கேட்டிருந்தார்.
“லசந்த விக்ரமதுங்க படுகொலையின் கொலையாளிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும். இவருடைய குடும்பத்தினருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு, அந்த கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்” என பாராளுமன்ற உரையின்போது அவர் வலியுறுத்தினார்.




