முந்தெனி ஆறு திட்டம் விரைவில் ஆரம்பம்

Date:

முந்தெனி ஆறு திட்டத்தை விரைவில் ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடல் இன்று (06) பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் வைத்திய கலாநிதி சுசில் ரணசிங்க, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் மஞ்சுளா சமரகோன், பொறியியலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக் கலந்துரையாடலில் குறித்த செயற்றிட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்கான முக்கிய விவகாரங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தெனி ஆறு திட்டம், நீர் மேலாண்மை மற்றும் விவசாய அபிவிருத்தியை முன்னேற்றுவதற்கான முக்கிய முயற்சியாக கருதப்படுகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

நேபாளை உலுக்கிய பேரழிவு: 162 பேர் பலி; 400க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளில் பேரழிவு: 162 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மாயம் நேபாளத்தின் வடக்குப் பகுதியில்,...

கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற மீலாத் ஊர்வலம் – பொலிஸார் ஒத்துழைப்பு

உத்தம நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சுன்னத்வல்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் மரணிக்கவும் தயார்-தம்பிராசா செல்வராணி

எமது உறவுகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நிதி உதவி தேவை தான்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்