கோயிலை புனரமைப்பு செய்தவர் தூண் விழுந்து மரணம்

Date:

இந்து கோவிலில் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் தலையில் கொங்கிரீட் தூண் உடைந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அந்நபர் உயிரிழந்ததாக பண்டாரவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பண்டாரவளை பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ஏற்பட்ட குறித்த இடரில் 65 வயதுடைய ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பண்டாரவளை, கிரேக்வத்த மேல் பிரிவைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதுப்பித்தல் பணிகளுக்காக கோவிலின் பழைய பகுதிகளை அகற்றும் போது குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பண்டாரவளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்...

நேபாளை உலுக்கிய பேரழிவு: 162 பேர் பலி; 400க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளில் பேரழிவு: 162 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மாயம் நேபாளத்தின் வடக்குப் பகுதியில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்