கனடா தூதர் பதவியை நிராகரித்தார் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா!

Date:

கனடாவுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நிராகரித்துள்ளார்.

கனடாவிற்கான இலங்கையின் புதிய உயர் ஸ்தானிகராக தப்புல டி லிவேராவை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பரிந்துரைத்தார்.

இருப்பினும், அவர் அதனை நிராகரித்ததாக சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலிருந்தபடி மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.

தற்போதைய சட்டமா அதிபரின் பதவிக்காலம் இந்த மாத இறுதியில் முடிவடைகிறது.

தப்புல டி லிவேரா தனது பதவிக் காலத்தில் இதுவரை 27,206 கிரிமினல் வழக்குகள் தொடர்பான நடவடிக்கைகளை முடித்துள்ளார் என்று சட்டமா அதிபர் திணைக்கள ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷார ஜெயரத்ன தெரிவித்தார்.

சட்டமா அதிபரின் இரண்டு ஆண்டு கால பதவிக்காலப் பகுதியில் (2019 மே முதல் 2021 மே வரை) இது செய்யப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

பலே திருடனை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிசார்

ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான மோசடி மற்றும் திருட்டு...

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை...

முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்!

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்