திருகோணமலையில் மணல் அகழ்வு பிரச்சினை: ஆளுநர் மற்றும் பிரதி அமைச்சரின் கலந்துரையாடல்

Date:

இன்றைய தினம் (28) திருகோணமலையில் மணல் அகழ்வு தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஆகியோரின் தலைமையில் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், மாவட்டத்தின் பல பிரதேச செயலாளர்கள், புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம், வனத்துறை, மகாவலி அதிகாரசபை, நீர்ப்பாசனத் துறை, காவல்துறை மற்றும் கடற்படை உள்ளிட்ட பொறுப்பான நிறுவனங்கள் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலின் முக்கியக் குறிக்கோள் திருகோணமலை மாவட்டத்தில் மணல் அகழ்வு தொழிலுக்கு வழங்கப்படும் அனுமதிகளில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் சிக்கல்களை தீர்க்கும் வழிமுறைகளை ஆராய்வது என குறிப்பிடப்படுகின்றது. குறிப்பாக, மகாவலி ஆற்றின் குறுக்கே மணல் அகழ்வின் போது மக்களின் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் சீர்செய்ய நடவடிக்கைகள் எடுக்கவும் ஆளுநரும் பிரதி அமைச்சரும் உறுதியளித்தனர்.

மேலும், தாமதங்களுக்கு காரணமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோன்ற பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாமல் செய்ய, கடுமையான விதிமுறைகள் கொண்டு உரிமங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்