கோட்டை – காங்கேசன்துறை இடையே இரவு ரயில் சேவை அறிமுகம்

Date:

இம்மாதம் 31ஆம் திகதி முதல், கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான தினசரி இரவு தபால் ரயில்களை இயக்குவதற்கான நடவடிக்கை ரயில்வே திணைக்களம் எடுத்துள்ளது.

இந்த இரவு ரயில் சேவையின் படி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இரவு 8:00 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 4:35 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்தை சென்றடையும். அதேபோல், காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து இரவு 8:00 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை 4:40 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.

இந்த புதிய ரயில் சேவை, பயணிகளுக்கு இரவு நேரத்தில் மேலும் விரைவான மற்றும் வசதியான பயணம் செய்ய உதவுகின்றது என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

உ.பி.யில் டேட்டிங் செயலி மூலம் ரூ.6 கோடி சுருட்டிய பெண்

உத்தர பிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜைச் சேர்ந்​தவர் பல்​லவி சிங் ராஜ்புத். இவர்...

போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலிப் நாணயத்தாள்களை வைத்திருந்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்