இனவாத வெறியாட்டத்துக்கு நிறுத்தம்: வன்முறையாளர்களுக்கு சிறைத்தண்டனை எச்சரிக்கை – பிரதமர் ஹரிணி அமரசூரிய

Date:

இலங்கையில் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் இனிமேல் இடமில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்கள். இன, மத வன்முறைகளை தூண்டுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனை அனுபவிப்பார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு நீதிவான் நீதிமன்றம், பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் 9 மாத சிறைத்தண்டனை விதித்ததையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்,

இசைவற்ற இந்நாட்டில் இன, மத அவமதிப்புகளை தூண்டுபவர்கள் இனிமேலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதையும், சட்டத்தின் உரிமையை மதிக்க வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், குற்றம் செய்வோர் எவராக இருந்தாலும் அவர்கள் தக்க தண்டனையை பெற்றே தீருவார்கள் என்றும், நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்புகளை தேசிய மக்கள் சக்தி அரசு முழுமையாக ஆதரிக்கிறது என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதிபடுத்தினார்.

spot_imgspot_img

More like this
Related

நடமாடும் ஏவுதளத்திலிருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்த ரஷ்யா

வடமேற்கு அர்காங்கெல்ஸ்க் பகுதியில் உள்ள ப்ளெசெட்ஸ்க் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, நகரும் தன்மையுடைய,...

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்