தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள் மதுபான போத்தல்களுடன் வர்த்தகர் கைது

Date:

இன்று செவ்வாய்க்கிழமை (31) கட்டுநாயக்க விமான நிலையத்தில், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தடை செய்யப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகள் மற்றும் மதுபான போத்தல்களுடன் குறித்த வர்த்தகர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

கொழும்பு – 14 பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இந்தியாவின் பெங்களூர் நகரத்திலிருந்து இன்றைய தினம் அதிகாலை 03.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து வெளிநாட்டு சிகரட்டுகள், 125 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபரான வர்த்தகர் நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் உள்ள மதுபானசாலைகள் மற்றும் விற்பனை நிலைங்களுக்கு விற்பனை செய்வதற்காக இந்த வெளிநாட்டு சிகரட்டுகள் மற்றும் மதுபான போத்தல்களை கொண்டுவந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பொலிசார் பௌத்தர்களென்பதால் தையிட்டி விகாராதிபதிக்கு பயந்து செயற்படுகிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த...

தையிட்டி விகாரைக்குள் சிக்கிய காணி மீட்பு விவகாரம்: 21ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான...

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் முதல்வர் ஜோசப் விஜய் சந்திப்பு

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் இன்று நாம் தமிழர் கட்சியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்