திருமலையில் முன்பள்ளி சிறார்களால் விழிப்புணர்வு

Date:

நத்தார் தினத்தை முன்னிட்டு, நேற்றைய தினம் (20.12.2024) திருகோணமலையில் உள்ள BLOSSOMING FUTURE முன்பள்ளியால் சமூகத்தின் பசுமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் முயற்சியாக விழிப்புணர்வு நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பிளாஸ்டிக் இல்லாத எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில், சிறுவயதில் இருந்து மரங்களை வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவித்து பசுமைiயான உலகை உருவாக்கும் பொருட்டு திருகோணமலை 3ஆம் கட்டை சந்தியில் காலை 8.30 மணியில் இருந்து ஒரு மணி நேரம் வரை இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை விளக்கும் ஒரு அறிகுறியாக முன்பள்ளி மாணவர்களின் பங்கேற்புடன் 100 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு, சமூகத்தில் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பசுமையான உலகத்தை வடிவமைக்க, உறுதிமொழியளிக்கும் ஒரு முக்கியமான முயற்சியாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்