28.9 C
Jaffna
March 4, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

தொடர் மழை… பல பகுதிகளில் நீரில் மூழ்கின!

நாட்டை பாதிக்கும் மோசமான காலநிலை காரணமாக நேற்று (11) இரவு கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழையாக 175.5 மில்லி மீற்றர் அவிசாவளை எல்ஸ்டன் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் இன்று (12) காலை 9.30 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில், களனி கங்கை நாகலகம் தெரு மற்றும் ஹங்வெல்ல பகுதிகளில் சிறு வெள்ளப் பெருக்கு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கொலன்னாவ, வெல்லம்பிட்டிய, களனிமுல்ல, அம்பத்தளை, கல்வான, மல்வான ஆகிய நகரங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதேவேளை, களனி ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் கடுவெல மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள கடுவெல இடமாற்றப் பகுதிகளில் பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

களனி கங்கையின் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ள நிலையில், ஹங்வெல்ல நீர்மானியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. 8.8 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் மெஹகம, கொடபரகொடெல்ல, சிவலிவத்த, ஜயவீரகொட, வலவ்வத்த, வனஹகொட, எரியகொல்ல போன்ற பல தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அந்த பகுதியில் உள்ள வீடுகளில் இருந்த மக்களும் இடம்பெயர் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது தவிர களு கங்கை மில்லகந்த பிரதேசத்திலும், பத்தேகம பகுதியில் கிங் கங்கையிலும் சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. களுத்துறை – பண்டாரகம பிரதான வீதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

புலத்சிங்கள மற்றும் பரகொட பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், இவ்வருடம் 17வது தடவையாக வெள்ளத்தினால் தமது பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

குகுலே கங்கை நீர்த்தேக்கத் திட்டத்தினால் தாம் இந்தப் பிரச்சினையை எதிர்நோக்குவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

சங்கு கூட்டணியில் இணையாமலிருக்க தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசன் தரப்பு தீர்மானம்: பணம் வழங்குபவர்களின் அழுத்தத்தால் முடிவு?

Pagetamil

Leave a Comment