25.4 C
Jaffna
February 6, 2025
Pagetamil
உலகம்

கொத்துக் கொத்தாக செத்து மடிந்த மீன்கள்; பதறவைக்கும் அதிர்ச்சி பின்னணி!

லெபனான் நாட்டில் உள்ள லித்தானி நதிக் கரை அருகே உள்ள ஏரியில் கொத்துக் கொத்தாக ஏராளமான மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. இதனால் அருகே கிராமம் துர்நாற்றத்தால் சூழ்ந்துள்ளது.

மீன்கள் இறந்ததற்கு தண்ணீர் மாசுபாடுதான் காரணம் என உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஏரிக் கரையில் ஒதுங்கிக் கிடக்கும் இறந்த மீன்களை தன்னார்வலர்கள் சேகரித்து அகற்றி வருகின்றனர்.

கழிவுநீரால் தண்ணீர் மாசுபாடு அதிகரித்து வருவது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக எச்சரிந்து வந்தனர். இந்நிலையில், மீன்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீன்கள் அகற்றப்பட்ட இடங்களில் ஏராளமாக குப்பைகளும் கிடக்கின்றன. இதுபோக, பூச்சிகள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. ஏற்கெனவே மாசுபட்ட் அழுக்கு நீரில் மீன்கள் அழுகிக் கொண்டிருப்பது கடும் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த சில நாட்களிலேயே 40 லட்சம் மீன்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்விவகாரம் குறித்து லித்தானி நீர் ஆணையம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விற்ற வீட்டில் புது ஓனருக்கு தெரியாமல் 7 ஆண்டுகள் வாழ்ந்த கில்லாடி பெண்

east tamil

இஸ்ரேலும் மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து விலகல்

east tamil

யூதர்களுக்கு ஆதரவாக மனித உரிமை பேரவையில் இருந்து விலகிய அமெரிக்கா

east tamil

திருநங்கைகள் விளையாட்டில் பங்கேற்க தடை – ட்ரம்ப்

east tamil

DeepSeek ஆபத்தானது

east tamil

Leave a Comment