வேறு ஒரு அரசியல் கட்சியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டதற்கு எதிராக கலாநிதி விஜயதாச ராஜபக்ச மீது உரிய நடவடிக்கை எடுக்க கட்சியின் அரசியல் குழு தீர்மானித்ததாக இலங்கை பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
இந்த விடயம் முதலில் ஒழுக்காற்று சபைக்கு அனுப்பப்பட்டதாகவும், ஒழுக்காற்று சபையின் அறிக்கை அண்மையில் கட்சிக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
விஜயதாச ராஜபக்ச அவ்வாறு செய்வது கட்சியின் அரசியலமைப்பை மீறும் செயலாகும் என ஒழுக்காற்று சபை தீர்மானித்துள்ளது.




