நெல்லியடி நகரில் கொரோனா தடுப்பு செயற்திட்டத்தில் பொலிசார் இன்று ஈடுபட்டனர். இதன் ஒரு கட்டமாக நகரில் முகக்கவசம் அணியாமல், முறையாக அணியாமல் பயணித்தவர்களை கைது செய்யும் நடடிக்கையும் மேற்கொண்டனர்.
கடந்த ஒரு வாரமாகவே நெல்லியடி நகரில் சுகாதார விழிப்புணர்வு நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டனர். முக்கவசம் அணியாவர்கள் அறிவுரை கூறி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று அதிரடி நடவடிக்கையில் இறங்கிய பொலிசார், நெல்லியடி சந்தியில் முகக்கவசம் அணியாமல் பயணிப்பவர்களை கைது செய்தனர்.
முழுமையாக முகக்கவசம் அணியாத 4 பேர் கைது செய்யப்பட்டனர். சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றாத பலர் அறிவுரை கூறி அனுப்பி வைக்கப்பட்டனர்.
கைதான நான்கு பேர் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவுள்ளது. அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.




