நாட்டில் இன்று மேலும் 414 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்படி, நாட்டில் இன்று 1,531 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிகபட்ச தொற்றாளர் எண்ணிக்கை இதுவாகும்.
இதேவேளை, இன்றைய தொற்றாளர்கள் அனைவரும் “புத்தாண்டு கோவிட் -19 கொத்தணி” என்ற புதிய கொத்தணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை, அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் அனைவரும் பேலியகொட கொத்தணியின் கீழே இணைக்கப்பட்டு வந்தனர். இன்று, அதிகாரபூர்வமாக பேலியகொட கொத்தணி முடிவுக்கு வந்து, புத்தாண்டு கொத்தணியின் கீழ் தொற்றாளர்கள் இணைக்கப்பட்டுள்ளார்கள்.
கீழ் இன்று கண்டறியப்பட்ட புதிய கோவிட் நோயாளிகளை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.
பேலியகொட கொத்தணியின் கீழ் நேற்று வரை 99,245 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இன்று ஆரம்பித்த”புத்தாண்டு கோவிட் -19 கொத்தணி”யின் கீழ் 1531 கோவிட் நோயாளிகள் இன்று அடையாளம் காணப்பட்டனர்.




