விஜய் கூறியதைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் இயக்க உறுப்பினர்கள்!

Date:

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விஜய் கூறியதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போராடிக் கொண்டிருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையை தடுக்க நாட்டில் உற்பத்தி அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் படுக்கை வசதி தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. அதோடு, ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பிரபலங்கள் என்று பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வரும் நிலையில், விஜய் கூறியதன் பேரில் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் உதவி செய்துள்ளனர்.

விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு வரும் கொரோனா நோயாளிகளின் தேவைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களும், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என்று அனைவருக்கும் முகக் கவசங்கள், கையுறைகள் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...

மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது...

கறிவேப்பிலை பறித்தவர் உயிரிழந்தார்

யாழ்ப்பாணத்தில் நேற்று (01) கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்