அரசாங்க பொறியில் கூட்டுத்தாபனத்தின் தலைவரை, ஊழியர்கள் சிறைப்பிடித்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
பிரதான அலுவலகத்தில் உள்ள தலைவரின் அலுவலகத்திற்குள் அவர் நீண்டநேரமாக தடுத்து வைககப்பட்டார்.
மாதாந்த சம்பளக் கொடுப்பனவு உரிய திகதியில் வழங்கப்படாத விவகாரம் பின்னர் அமைதியின்மையாக மாறியது.
அங்கு பொலிசார் அழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர் சங்கத்தின் செயலாளர் வசந்த கருணாதிலக கருத்து தெரிவித்த போது, புதிய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து சம்பளக் கொடுப்பனவுகள் தாமதமாகிவிட்டதாகவும், இது தொடர்பில் பேச்சு நடத்த ஊழியர்கள் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லையென கூறினார்.
சம்பளக் கொடுப்பனவுகளுக்கான ஒரு குறிப்பிட்ட திகதியை நிர்ணயிக்குமாறு ஊழியர்கள் விடுத்த கோரிக்கையை, தலைவர் சாதகமாக பரிசீலிக்கவில்லை.
அவர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தபோது, தலைவர் அதை அடக்கும் விதமாக பொலிசார், மருத்துவ அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார ஆய்வாளர்களை அழைத்ததாக தெரிவித்தார்.
ஊழியர்கள் ஒரு நியாயமான தீர்வையும், ஏப்ரல் சம்பள கொடுப்பனவுகள் எப்போது செய்யப்படும் என்பதற்கான பதிலையும் மட்டுமே கோருகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.



