இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாடு 19ஆம் திகதி!

Date:

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளது.

பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தெரிவில் இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து, தேசிய மாநாடு திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், செயலாளர் பதவியை ஞா.சிறிநேசனும், ச.குகதாசனும் ஒவ்வொரு வருடங்கள் பகிர்ந்து கொள்ள இணக்கம் கண்டிருந்தனர். எனினும் யார் முதல் பதவிக்காலத்தை வகிப்பது என்பதில் இணக்கம் எட்டப்படவில்லை. இன்று இரவு வரை இந்த விவகாரம் தீர்வின்றியே காணப்படுகிறது.

எனினும், 19ஆம் திகதி திருகோணமலையில் தேசிய மாநாட்டை நடத்துவதென கட்சி தீர்மானித்துள்ளது. இதற்காக இன்று மண்டபமும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்