முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத மீனவர் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை (19) கரையொதுங்கியுள்ளது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள, இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி கடற்கரையிலேயே இந்த சடலம் கரையொதுங்கி உள்ளது
தெப்பம் ஒன்றில் மிதந்து வந்த நிலையில் சடலம் கரையொதுங்கி இருக்கின்றது
இதில் உள்ள கலன்களில் இந்தியாவின் தெலுங்கு மொழிகள் எழுதப்பட்ட அடையாளங்கள் காணப்படுகின்றன.
சம்பவ இடத்துக்கு வந்த முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




