வடமாகாண சுற்றுலா வழிகாட்டியில் வடக்கிற்கு வெளியேயுள்ள பௌத்த வழிபாட்டிடங்களை இணைக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து ஆராயுமாறு வடக்கு ஆளுனரிடம் கடிதம் மூலம் கேட்டுள்ளார் வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்.
வடக்கு சுற்றுலா வழிகாட்டியில் வடக்கிற்கு வெளியிலுள்ள பௌத்த வழிபாட்டிடங்களை இணைத்து, வடக்கை பௌத்த மயமாக்கும் நடவடிக்கையா என எழுந்துள்ள விமர்சனங்களை தொடர்ந்து, வடக்கு அவைத்தலைவர் இது குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.
முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் அனுராதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வழிபாட்டிடங்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன், வடக்கிலுள்ள சைவ, கிறிஸ்தவ வழிபாட்டிடங்கள் விடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு சுற்றுலா பணியக தலைவரை வடக்கை சேராத சிங்களவர் ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வடக்கு ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.




