the finance co.plc நிதி நிறுவனத்தில் வைப்பிலிடப்பட்ட பணத்தை இழந்த வைப்பாளர்களால் இலங்கை மத்திய வங்கிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, இந்த சம்பவத்தின் போது வங்கியல்லாத நிதி நிறுவன கண்காணிப்பு பிரிவிற்கு பொறுப்பாக இருந்த இலங்கை மத்திய வங்கியின் தலைவர்களை தனிப்பட்ட பிரதிவாதிகளாக குறிப்பிட மனுதாரருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், மனு தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின், ஜூன் 15ம் திகதிக்குள் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என the finance co.plc நிறுவனத்தின் பணிப்பாளர் சபை, இலங்கை மத்திய வங்கி, அதன் ஆளுநர் மற்றும் ஏனைய தரப்பினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணையை செப்டம்பர் 18ஆம் திகதி நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
தனியார் நிதி நிறுவனங்களின் செயல்திறனை மேற்பார்வை செய்யும் அதிகாரம் இலங்கை மத்திய வங்கியின் வங்கி அல்லாத நிதி நிறுவன மேற்பார்வைப் பிரிவின் பொறுப்பாகும் என்று மனுதாரர்கள் கூறுகின்றனர்.
2011ஆம் ஆண்டிலிருந்து the finance co.plc நிறுவனத்தில் பல்வேறு நெருக்கடிகள் தோன்றியதை மத்திய வங்கி அறிந்திருந்தும், அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், தங்களது வைப்புத்தொகையை திரும்பப் பெறுவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்க உத்தரவிடுமாறும் வைப்பாளர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.




