இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுக்குழு கூட்டம் நாளை மறுநாள் (21) திருகோணமலையில் நடைபெறும். காலை 10 மணிக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கூடி, புதிய தலைவரை தெரிவு செய்வார்கள்.
இதற்கு முன்னதாக, 20ஆம் திகதி மாலை கட்சியின் மத்தியகுழு கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் தற்போதைய மத்தியகுழுவின் கடைசிக் கூட்டம் இது.
எனினும், கட்சியின் பதில் பொதுச்செயலாளரிடமிருந்து, மத்தியகுழு கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
பதில் பொதுச்செயலாளர் பா.சத்தியலிங்கம் நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில், அவரல் மத்தியகுழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாததால், கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மத்தியகுழு உறுப்பினர்களுக்கும் இது அறிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி 21ஆம் திகதி பொதுக்குழு கூடி, தலைவர் தெரிவு நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது. இதற்காக 5 அல்லது 8 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படும். அவர்கள் முன்னிலையில் தலைவர் தெரிவு நடைபெறும்.




