காயான்கேணியில் மினி சூறாவளி

Date:

மட்டக்களப்பு வாகரை காயான்கேணி கடற்கரை பிரதேசத்தில் இன்று (6) அதிகாலை வீசிய மினி சூறாவளி காரணமாக படகுகள் சில சேதமடைந்துள்ளதாக பிரதேச மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வழக்கத்திற்கு மாறாக கடற்கரையில் இன்று அதிகாலை 2.30 மணி தொடக்கம் 3.00 மணி வரை வேகமான காற்று வீசியதுடன் மழையும் பெய்ததாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதன்போது கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கரையோரப் படகுகள் தூக்கி வீசப்பட்டுள்ளன. இதனால் 06 படகுகள் சேதமடைந்துள்ளன. இதில் ஒரு படகு அதன் இயந்திரம் போன்றன பெருமளவு சேதத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஏனையவை பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன் கரையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த கடற்படையினரின் ஓலைக் கொட்டில் மற்றும் மீனவர்கள் பயன்படுத்தும் குடிசைகள் என்பன சேதமடைந்து காணப்படுகிறன. சேதமடைந்த தங்களது படகினை திருத்தம் செய்து மீள பாவிப்பதற்கு தங்களிடம் போதியளவு பணமில்லையென பாதிக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதேவேளை அச்சம் காரணமாக மீனவர்கள் இன்று அதிகாலை கடல் தொழிலுக்கு செல்லவில்லை.

சம்பவம் பற்றி வாகரை பிரதேச செயலாளர் ஜி.அருணன் நேரில் சென்று நிலமைகளை பார்வையிட்டதுடன் மேலதிக நடவடிக்கைக்காக மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

-க.ருத்திரன்-

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய் அமைச்சரவையில் மோசடிப் பேர்வழி: எச்சரிக்கும் மைத்துனர்!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை முதல்வர் விஜய் கண்காணிக்குமாறு லஜக தலைவர் ஜோஸ்...

திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் உதயநிதி ஸ்டாலின்

திமுகவின் சட்டப்பேரவைக் கட்சியின் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக தலைமை...

“தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

‘தமிழ்நாட்டில் நீண்டகாலமாக அரசு நிகழ்ச்சிகளில், துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்