முக்கிய அசியல் தலைவர்களின் குடியுரிமையை பறிக்க திட்டம்: சஜித் சந்திப்பின் காரணத்தை சொன்ன ரணில்!

Date:

முக்கிய சில அரசியல் தலைவர்களின் பிரஜாவுரிமையை இரத்து செய்ய அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்துள்ளது.

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையின் பாராதூர தன்மையை அறிந்தே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்கள் என்னை சந்தித்து கலந்துரையாடியதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு 3 , 5 ஆம் ஒழுங்கையில் உள்ள ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் கட்சி உறுப்பினர்களை நேற்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கை பாராதூரமானதாகும். முக்கிய சில அரசியல் தலைவர்களின் பிரஜாவுரிமையை இரத்து செய்யவே ராஜபக்ஷ ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர்.

இது குறித்து ஐக்கிய தேசிய கட்சி கவனம் செலுத்தியுள்ளதுடன் சட்டதரணிகளுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை ஒன்றிணைக்குமாறு கோரப்பட்டது.

இதனடிப்படையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினேன். அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை ஆணைக்குழு அறிக்கை குறித்து இதன் போது பரந்தளவில் பேசினோம் என்றார்.

இதேவேளை, அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழுவிற்கு எதிராக ஜேவிபி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்