நெடுங்கேணியில் வெடிமருந்துடன் கைதானவருக்கு புலிகளுடன் தொடர்பாம்!

Date:

வவுனியாவில் வெடிபொருட்களுடன் கைதானவர் முக்கிய பிரமுகர்களை கொல்ல திட்டமிட்டார் என சிங்கள ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்று முன்தினம், வவுனியா நெடுங்கேணி பகுதியில் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவரது வீட்டிலிருந்து 24 கிலோகிராம் சி4 வெடிமருந்து, 5 கிலோகிராம் பி.இ வெடிமருந்து, 148 மிதிவெடிகள், 22 டெட்டனேட்டர்கள் என்பன அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டன.

மக் கண்ணிவெடியகற்றும் நிறுவனத்தின் பணியாளரான அந்த இளைஞர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். நெடுங்கேணி, சேனைப்புலவு பகுதியில் வாடகைக்கு வீடொன்றை பெற்று தங்கியிருக்கிறார்.

அவர் வெடிமருந்தை விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்களிற்கு வழங்க திட்டமிட்டதாகவும், வெளிநாட்டிலுள்ள விடுதலைப் புலிகளுடன் தொடர்புடய ஒருவருடன் தொடர்பிலிருந்தார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

கொழும்பு பிரதேசத்திற்கு 20 நாட்கள் மட்டுமே குடிநீர் வழங்க முடியும்

கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும்...

குடிநீர் பற்றாக்குறையை கண்காணித்து நிர்வகிக்க குழு நியமனம்

தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக நீர்த்தேக்கங்கள் தொடர்ந்து வற்றி வருவதால்,...

இலங்கை கிரிக்கெட் சபைக்கு எதிராக நீதிமன்றம் சென்ற நுவான் துஷார!

2026 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் உள்ளிட்ட வெளிநாட்டு பிரீமியர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்