இலங்கை முழுவதும் 1000 இற்கும் அதிக இளையவர்களிடம் மோசடி: 24 வயது யுவதி கைது!

Date:

பம்பலப்பிட்டி லொரிஸ் வீதி பகுதியில் போலி கல்வி நிறுவனம் ஒன்றின் பணிப்பாளராக கடமையாற்றிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கிரியுல்ல, நாரங்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிறுவனம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்களை இணைத்து, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்குத் தேவையான டிப்ளோமா மற்றும் மேம்பட்ட டிப்ளோமா கல்வியை வழங்குவதாக சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு பட்டறைகளை நடத்தி வருகிறது.

சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாமல் கல்வி கற்றுத் தந்த பிறகு போலி டிப்ளமோ சான்றிதழ்களை அந்த நிறுவனம் வழங்கியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

டிப்ளோமா பாடநெறி ஒன்றிற்கு, பாடநெறி வகைக்கு ஏற்ப, 100,000 முதல் 445,000 ரூபா வரை பணம் அறவிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மோசடியாக பணம் பெற்றுக் கொண்டமை தொடர்பில் 43 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற போதிலும், குறித்த ஆணைக்குழுவின் பதிவுகள் இன்றி சட்டவிரோதமான முறையில் இந்த நிறுவனம் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் எனவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த மோசடிகளில் சிக்கியவர்கள் சுமார் 1000 பேர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிறுவனம் பல்வேறு இலத்திரனியல் உபகரணங்களை பயன்படுத்தி வேலை வாய்ப்பு வழங்குவதுடன் உயர்கல்விக்கான விளம்பரங்களை வெளியிட்டு பணம் திரட்டுவதும் மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த போலி நிறுவனத்தின் இணைப் பணிப்பாளராக செயற்பட்ட மட்டக்குளிய பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நகுலேஸ்வரத்தில் வௌ்ளி திருட்டு – இருவர் கைது

இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் கீரிமலை - நகுலேஸ்வர சிவ...

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்