ஒன்றரை வயது சிறுமியை சீரழித்த 63 வயது தாத்தா கைது!

Date:

ஒன்றரை வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததால் குடும்பத்தினரால் தாக்கப்பட்டு, பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

63 வயதான இந்த சந்தேக நபர் நேற்று இரவு லுனுகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 16ஆம் திகதி காலை, சந்தேக நபரின் மனைவி தெஹிகஹவத்தை- கொட்டல்பெத்தவில் வசிக்கும் தனது மகனின் வீட்டிற்கு வந்து, மதியம் வீடு திரும்பும் போது, தனது ஒன்றரை வயது பேத்தியையும் அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

அதன்பிறகு, மாலையில், சிறுமியை தனது கணவர்- தாத்தாவுடன் வீட்டில் நிறுத்தி விட்டு விறகு வெட்ட தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

அப்பொழுது சிறுமியின் தந்தை தனது மகளை அழைத்துச் செல்வதற்காக வீட்டுக்கு வந்துள்ளார்.

வீட்டின் கதவு மூடப்பட்டிருந்ததால், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, ​​தன் தந்தையால் (சிறுமியின் தாத்தா) தன் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதைக் கண்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை தந்தையை அடித்து உதைத்து சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது.

இரண்டு நாட்களின் பின்னர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான சிறுமியின் தந்தை லுனுகல பொலிஸாருக்கு வந்து இது தொடர்பில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

சந்தேக நபர் தனது மகனால் தாக்கப்பட்டதாக கூறி லுனுகல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டடிருந்தார்.

கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபரான வயோதிபர் பதுளை வைத்தியசாலையின் வார்டு இலக்கம் 8 இல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் தீ விபத்துகளை தடுக்க தீயணைப்பு சிலிண்டர் கருவிகள் பொருத்துவது கட்டாயம் மாநகர சபை முதல்வர் அதிரடி உத்தரவு

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக வர்த்தக நிலையங்கள், தங்குமிடங்கள்...

நீர்கொழும்பில் இருந்து இராணுவ பாதுகாப்புடன் மட்டு சிறைக்கு 60 கைதிகள் அழைத்துவரப்பட்டனர் -மட்டு சிறையில் 1020 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இராணுவம்   விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்புடன் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு...

சுகீஷ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி Gotabaya Rajapaksaவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஷ்வர லெனின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்