உலகக்கிண்ணம் வரை தசுன் ஷானக கப்டனாக செயற்படுவார்!

Date:

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பு தசுன் ஷானகவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வரை தசுன் ஷனக்கவுடன் இணைந்து செயற்பட தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கட் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் நிறுவனத்தின் தெரிவுக்குழுவின் விசேட கூட்டம் இன்று காலை இடம்பெற்றதாகவும், குறித்த சந்திப்பு இன்று பிற்பகல் வரை இடம்பெற்றதாகவும் தெரிய வருகிறது.

கிரிக்கெட் நிறுவனத்தின் கூட்டத்தில் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க மற்றும் அதன் உறுப்பினர் ரொமேஷ் களுவிதாரண ஆகியோர் கலந்துகொண்டனர்.

தலைமைத்துவ மாற்றம் தொடர்பில் தெரிவுக்குழுவிற்கும் தசுன் ஷனக்கவிற்கும் இடையில் நீண்டநேரம் தகவல் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இறுதியில் உலகக் கிண்ண அணியையும் தசுன் ஷனக வழிநடத்த வேண்டும் என தெரிவுக்குழு கருத்து தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவ பாதுகாப்பு மோட்டார்சைக்கிள் இராணுவ ரோந்து நடவடிக்கையடுத்து – பரபரப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பொலிசார் இணைந்து...

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு : போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த மாடுகளுக்கு எதிராக பிரதேச சபை – பொலிஸார் இணைந்து நடவடிக்கை

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்து, தொடர்ச்சியாக வீதி விபத்துகளுக்கும் விவசாயப் பயிர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்