பெல்ஜியத்தில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான ஒரு கிலோ ஹஷிஸ் போதைப்பொருளை இலங்கை சுங்கப் திணைக்களம் கைப்பற்றியதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்பட்ட பயணிகளின் சாமான்கள் அடங்கிய பொதியில் ஒரு கிலோ 98 கிராம் காணப்பட்டதாகவும், போதைப்பொருளின் பெறுமதி 16,470,000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வென்னப்புவ பிரதேசத்திலுள்ள முகவரிக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.




