97 வயதில் பௌத்த கற்கையில் முதுமாணி பட்டம் பெற்ற மூதாட்டி!

Date:

97 வயதான விதானகே லீலாவதி அஸ்லின் தர்மரத்ன, களனிப் பல்கலைக்கழகத்தின் பாலி பௌத்த கற்கைகள் முதுகலைப் பட்ட நிறுவனத்தினால் இவ்வருடம் நடாத்தப்பட்ட பௌத்த கற்கையில் முதுமாணிப் பட்டத்தை பெற்று வெற்றியீட்டியுள்ளார்.

இந்தப் பல்கலைக்கழகத்தின் மூத்த மாணவியும் அவர்தான்.

7 பாடங்களைக் கொண்ட இந்த முதுகலைப் பட்டத்திற்கு, பாலி நிகாயா கதா பௌத்த சிந்தனை – பகுப்பாய்வு மற்றும் வர்ணனை, புத்த கலை மற்றும் கட்டிடக்கலை 11 (இலங்கை) பௌத்த உளவியல், புத்த பொருளாதார தத்துவம், தேரவாத பாரம்பரியம் – வரலாறு மற்றும் தர்ம விஷயங்கள், பௌத்த நெறிமுறைகள் – கருத்துக்கள் மற்றும் தத்துவ விளக்கம், ஆராய்ச்சி முறை மற்றும் விரிவாக்கம் ஆகியவை பாடங்களில் தோற்றியுள்ளார்.

அஸ்லின் தர்மரத்ன தனது 94வது வயதில் வித்தியோதயா பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட திரிபிடக தர்மம் மற்றும் பாலி மொழி பரீட்சையில் சித்தியடைந்தார்.

இவர் 6 பெண் குழந்தைகளின் தாயாராவார்.

1952 இல் இலங்கையிலில் நொத்தாரிசாக சித்தியடைந்த முதல் பெண்மணியும் இவரே ஆவார்.

spot_imgspot_img

More like this
Related

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...

வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்!

“சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்