15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பொத்துப்பிட்டிய பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் இரண்டு ஊசிகளை விழுங்கிய நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொத்துப்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் தனது சட்டபூர்வமற்ற மனைவியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், நேற்று (6) இரு தரப்பினரும் பொலிஸாருக்கு அழைக்கப்பட்டு முறைப்பாடு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
விசாரணையின் பின்னர், சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டதாகவும், அவர் பதற்றமடைந்து இரண்டு ஊசிகளை விழுங்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.




