பாராளுமன்றத்தில் ஜாம் திருடிய சமையல்காரர் கைது!

Date:

பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் இருந்து சமையல்காரர் ஒருவர் ஜாம் மற்றும் பாலுடன் வெளியேறும் போது பாராளுமன்ற பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்திற்கிடமான சமையல்காரர் ஓகஸ்ட் 3 ஆம் திகதி மாலை தனது மோட்டார் சைக்கிளில் வேலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய பொலிஸார், மோட்டார் சைக்கிளில் தொங்கியிருந்த பையை சோதனையிட்ட போது, அதில் ஜாம் மற்றும் பால் இருந்ததை கண்டுபிடித்து சந்தேக நபரை கைது செய்தனர்.

சந்தேகநபர் மோட்டார் சைக்கிளை வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு, திருடப்பட்ட பொதியை அன்று மதியம் மோட்டார் சைக்கிளில் தொங்கவிட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் வெலிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்