அஜித் ரோஹனவின் மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது!

Date:

தனது இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு கோரி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை இன்று (10) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இது தொடர்பான மனு வரும் 17ம் திகதி விசாரணைக்கு வருகிறது.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் உத்தரவின்படி, ஏப்ரல் 25, 2023 அன்று, சேவைத் தேவைகளின் அடிப்படையில் என குறிப்பிட்டு அஜித் ரோஹன உட்பட ஏழு மூத்த டிஐஜிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். எனினும், குறிப்பிட்ட ஒரு டிஐஜியை பொலிஸ்மா அதிபராக்கும் அமைச்சரின் முயற்சியின் அடிப்படையிலான இடமாற்றம் என்றும் விமர்சிக்கப்பட்டது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, அமைச்சின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், இது தொடர்பான உத்தரவு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் அல்லது அவர்களின் அனுமதியுடன் பிறப்பிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இது சட்டவிரோதமானது, அரசியலமைப்புக்கு முரணானது என்றும், இடமாற்ற உத்தரவை தாம் பின்பற்றப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

மாகாண மட்டத்தில் முதலிடம்: தேசிய போட்டிக்குத் தெரிவான சாய்ந்தமருது அல்-ஹிலால் மாணவன்

சாய்ந்தமருது கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் எம்.என்.எம்....

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை அருந்திய சிறுமி பலி

கம்பளை, புப்புரேசா, டெல்டாவத்தை பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த மூன்று...

சிறையில் இறந்ததாக கூறப்பட்டவர் இறுதிச்சடங்கின் போது திடீரென வந்ததால் பரபரப்பு!

சிறையிலிருந்த ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்