வெளிநாட்டு கப்பல் கப்டன் கடலில் விழுந்து உயிரிழப்பு!

Date:

காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த அபுதாபி அரசுக்கு சொந்தமான ‘சீ பரோட்’ என்ற கப்பலின் பிரதம பொறியியலாளர் கப்பலில் இருந்து கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக காலி துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த 62 வயதான Alekseje Vitalij என்பவரே உயிரிழந்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த மே மாதம் 29 ஆம் திகதி முதல் இந்த கப்பல் காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்தது.

கப்பலின் தலைமைப் பொறியாளர் நேற்று காலை மேல்தளத்தில் ஏதோ பணியில் ஈடுபட்டிருந்தபோது கடலில் விழுந்தார். கடலில் விழுந்த பொறியியலாளரை கப்பலின் ஊழியர்கள் மீட்டு கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அங்கு அவர் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணைகளை காலி துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

யாழ் வைத்தியசாலை சம்பவம்: பின்னணியும், சந்தேகங்களும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் முறையற்ற விதமாக நடந்த பாதுகாப்பு ஊழியர் ஒருவரின்...

பேச்சுவார்த்தைக்கு ஈரான் குழு செல்லும்

பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, ஈரான் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21, 2026) இஸ்லாமாபாத்திற்கு ஒரு...

பெண்ணின் தலைமுடியை வெட்டியவர்களுக்கு விளக்கமறியல்

இணையத்தில் பரப்பப்பட்ட ஒரு காணொளிக் காட்சியின்படி, பொருட்கள் திருட்டு தொடர்பாக பல்பொருள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்