ஹஜ் பயணிகளுக்கு 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் : சவுதி அரேபிய அரசு அறிவிப்பு!!

Date:

ஹஜ் பயணிகளுக்காக சவுதி அரேபியா புறப்பட இருப்போர் கட்டாயமாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை அதிரடியாக வீசி வருகிறது. ஏறக்குறைய எல்லா நாடுகளிலுமே நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் யாத்ரீகர்கள் கட்டாயமாக இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜூலை 17ஆம் தேதி முதல் ஹஜ் யாத்திரை தொடங்கவிருக்கிறது.

கடந்த ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வெளிநாட்டவர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரேபியா அரசு தடை விதித்திருந்தது. எனவே, இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள இஸ்லாமியர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் மக்சூத் அகமது கான், “சவுதி அரேபிய சுகாதார அமைச்சர் மற்றும் ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஹஜ் பயணத்துக்காக சவுதி அரேபியா செல்ல திட்டமிட்டிருப்போர் கட்டாயமாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை நிறைவு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறன்று நாட்டின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும்...

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்