3 பிள்ளைகளுக்கும் விசம் பருக்கி, தானும் பருகிய தந்தை!

Date:

மனைவியுடன் ஏற்பட்ட தகராறையடுத்து, தனது மூன்று பிள்ளைகளிற்கும் விசம் கொடுத்து விட்டு, கணவனும் விசமருந்தியுள்ளார்.

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, தெல்பிட்டிய செவனக் காலனியில் இந்த சம்பவம் நடந்தது.

நால்வரும் கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

4 வயது சிறுவனும், 13 மற்றும் 7 வயதுடைய இரண்டு சிறுமிகளும் 40 வயதுடைய தந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கணவன் மனைவிக்கிடையில் நீண்டகாலமாக குடும்பத்தகராறு இருந்து வந்ததாக கம்பளை பொலிஸார் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மனைவி வீட்டை விட்டு வெளியேறியதுடன் மூன்று பிள்ளைகளும் தந்தையுடன் தங்கியுள்ளனர். நேற்று இரவு 10 மணியளவில் வீட்டுக்கு வந்த தந்தை, குழந்தைகள் கண்டுகொள்ளாமல் குளிர்பான போத்தலில் விசம் கலந்து, மூன்று குழந்தைகளையும் குடிக்க வைத்துவிட்டு, தனது அறைக்கு சென்று மதுவில் விசத்தை கலந்து அருந்தியுள்ளார்.

இரவு 11.30 மணியளவில் இரண்டு பிள்ளைகள் மற்றும் தந்தைக்கு வாந்தி எடுத்ததுடன், 13 வயது மூத்த மகள் சென்று பக்கத்து வீட்டில் வசிக்கும் பெரியப்பாவிடம் (தந்தையின் மூத்த சகோதரர்) தெரிவித்துள்ளார்.

பின்னர் அனைவரும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் வீட்டினுள் விசப் போத்தல் கண்டுபிடிக்கப்பட்டது.

விசம் அருந்துவதற்கு முன்னர் படுக்கையில் இருந்து மனைவி மற்றும் பிள்ளைகளின் புகைப்படங்களை கணவர் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

பலே திருடனை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய பொலிசார்

ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களைக் குறிவைத்து தொடர்ச்சியான மோசடி மற்றும் திருட்டு...

மட்டக்களப்பில் வறட்சி காரணமாக நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு மாவட்ட பிராந்திய முகாமையாளர் எந்திரி எஸ். ஜயந்தன் அறிவிப்பு

எல் நினோ காலநிலையினால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை...

முல்லைத்தீவு இ.போ.ச சாலைக்குள் நடந்த அகோர சம்பவம்!

இலங்கை போக்குவரத்துசபையின் முல்லைத்தீவுச்சாலை உதவி முகாமையாளரான பிரதீஸ்குமார் என்பவர், கடமை நேரத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்