சமூக ஊடகத்தில் தவறான தகவல் பரப்புபவர்களை தண்டிக்க புதிய சட்டவிதிகள்!

Date:

சமூக ஊடகங்களில் தீவிரவாத மற்றும் பயங்கரவாத தகவல்களை பரப்புவோரை தண்டிப்பதற்கான சட்ட விதிகளை உள்ளடக்குவதற்காக தண்டனைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (15) முல்லேரியாவில் நடந்த ஒரு விழாவில் பேசிய அமைச்சர், தீவிரவாத உணர்வுகளைத் தடுக்க புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவது, பேச்சு சுதந்திரத்திற்கான உரிமையைத் தடுக்காது என்று கூறினார்.

இருப்பினும், தவறான செய்தி சமூக ஊடக பயனர்களிடமிருந்து பரவலான கவனத்தைப் பெறுகிறது, இது நாடுகளுக்கு இடையிலான ஒற்றுமையை பாதிக்கிறது மற்றும் இனக்குழுக்களுக்கிடையேயான வேறுபாடுகளை ஊக்குவிக்கிறது.

எனவே, இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்காக திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

இதேவேளை, நாட்டில் காடழிப்பு இடம்பெறுவதாக மேற்கொள்ளப்படும்  95% பிரச்சாரம் பொய்யானது என்று கூறினார்.

அவுஸ்ஸ்திரேலிய அரசு நன்கொடையளித்த ட்ரோன்களின் உதவியுடன் சிறப்பு பணிக்குழு கண்காணிப்பை மேற்கொள்ளும் என்றும், இதன்மூலம் தவறான பிரச்சாரம் மேற்கொள்பவர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

காடழிப்பு நாட்டின் நல்வாழ்வை நேரடியாக பாதித்ததால், காடழிப்பில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்  அமைச்சர் வீரசேகர கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் மாயம்

புத்த சாசனம், சமய விவகாரங்கள் மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில்...

Update: பயணப்பொதியிலிருந்த பெண்ணின் சடலம்; நடந்தது என்ன?

சீதுவ பகுதியில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்த 69 வயது...

வீரவன்சவுக்கு அழைப்பாணை

முன்னாள் தேசிய சுதந்திர முன்னணித் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்