நீதித்துறையில் புதிய நியமனங்கள்!

Date:

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் கே.பி பெர்னாண்டோ, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் உயர் நீதிமன்ற நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

நீதியரசர் கே.பி பெர்னாண்டோ கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அரச தலைவர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எல்.டி.பி தெஹிதெனிய ஓய்வு பெற்றதையடுத்து நீதிபதி கே.பி பெர்னாண்டோ உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்.

கடந்த வாரம் கூடிய அரசியலமைப்பு பேரவை, நீதியரசர் கே.பி.பெர்னாண்டோவை உயர் நீதிமன்றத்திற்கு நியமனம் செய்வதற்கு ஏகமனதாக ஒப்புதல் அளித்தது.

இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன இன்று காலை கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதன்படி அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நீதியரசர் கே.பி.பெர்னாண்டோவுக்கு பதிலாக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.ஆர்.மரிக்கார் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக...

யாழ் போதனா வைத்தியசாலை தீ விபத்து; பெருமளவு மருந்துகள் அழிவு… மின் ஒழுக்கு காரணம்?: யாழில் தீயணைப்பு வசதி இல்லாததை வெளிச்சமிட்ட சம்பவம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்பட்ட...

தவெகவுக்கு விசிக ஆதரவு அளிக்க 2 காரணங்கள்… – திருமாவளவன் விவரிப்பு

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்