ஐஸ் பார்ட்டியில் சிக்கிய அரச புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்!

Date:

அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) உத்தியோகத்தர் ஒருவர், பேலியகொடையில் உள்ள வீடொன்றில் மேலும் இருவருடன் இணைந்து ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்திய போது, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் சனிக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் அரச புலனாய்வு சேவையின் தலைமையகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார். இந்த புலனாய்வு உத்தியோகத்தர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், போதைக்கு அடிமையானவர்கள் குழுவுடன் போதைப்பொருள் உட்கொள்வதற்காக அவர் அடிக்கடி பேலியகொடைக்கு வருவதாகவும் கிடைத்த தகவலின் பிரகாரம் இவரை கைது செய்ய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

அவரிடம் இருந்து 550 மில்லிகிராம் ஐஸ் மற்றும் ஆறு கிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்