திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.டி. ஜலீல் தனது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் கே.டி.ஜலீல். அவர், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும், பதவியேற்பு விதிகளை மீறியதுடன், அரசு பதவி நியமனங்களில் தனது வாரிசுகளுக்கு சலுகை அளித்ததாகவும் புகார் கூறப்பட்டது. இதனை விசாரித்த லோக் ஆயுக்தா அமைப்பு, இந்த புகாரில் அமைச்சர் குற்றவாளிதான் எனவும், அவர் பதவியில் நீடிக்க தகுதியில்லை எனவும் கடந்த வாரம் தெரிவித்தது.
இதை எதிர்த்து ஜலீல் தொடர்ந்த வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், லோக் ஆயுக்தா முடிவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
இதைத் தொடர்ந்து அமைச்சர் கே.டி.ஜலீல் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடைய கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளார் முதல்வர் பினராயி விஜயன்.




