கொரோனாவின் பிடியிலிருந்து மீளும் பிரிட்டன்: மீண்டும் இயல்பு நிலை திரும்புகிறது!

Date:

பிரிட்டனில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால அங்கு மக்களுக்கு தேவையான தளர்வுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து பிரிட்டனிலும் கொரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளது. பிரிட்டனில் கடந்த சில வாரங்களாக 5,000க்கும் குறைவானவர்களே தினசரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பிரிட்டனில் 60% கொரோனா தொற்று குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்றுப் பரவல் குறைந்துள்ளதன் காரணமாக பிரிட்டனில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

அதன் விவரம் வருமாறு,

* அனைத்து கடைகளையும் திறக்கலாம்.
* மக்கள் நெருக்கமாக கூடும் இடங்களான ஜிம், முடி திருத்தும் நிலையங்களை திறக்கலாம்
* உணவகங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களை திறக்கலாம்.
* நூலகங்கள், பொழுபோக்கு நிலையங்களை திறக்கலாம்.
* திருமண விழாக்களில் 15 பேரும் மரணமடைந்தவர்களின் இறுதிச் சடங்குகளில் 30 பேரு பங்கேற்க அனுமதிக்கப்படுகிறது. .
* ஸ்கொட்லாந்தில் பாடசாலைகள் திறக்க அனுமதி.

கொரோனா ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தாலும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இன்று அங்கு வர்த்தக நிலையங்கள், ஜிம்கள், மதுபான நிலையங்களில் பெருமளவான மக்கள் குவிந்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டு நகரில் கடை தொகுதிகள் தீப்பற்றியதை தீயணைப்பு படையினர் 4 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டில்

மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகள் இன்று...

வெனிசுலா நிலநடுக்க உயிரிழப்பு 3,500ஐ கடந்தது!

வெனிசுலாவின் இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,535 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: துப்பாக்கிகளை பறித்து சுட்ட கைதிகள்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரிவான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்