கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சம்பந்தப்பட்ட சம்பவங்கள் மற்றும் வேறு சில வீரர்கள் குறித்து வெளியாகியுளள் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நியமித்துள்ளது.
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் சிசிர ரத்நாயக்க மற்றும் சட்டத்தரணிகளான நிரோஷன பெரேரா மற்றும் அசேல றேகவ ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.
ரி20 உலகக்கிண்ணத் தொடரிற்காக அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம், உள்ளிட்ட இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் விசாரணைக்குழு கவனம் செலுத்தும் என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இந்தச் செயல்பாட்டில் உள்ள குழு, அத்தகைய சம்பவங்களைப் பற்றிய குறிப்புகளுடன், அவர்களது நடத்தை தொடர்பான குழு மேலாளரிடமிருந்து உடனடி விளக்கத்தைக் கோரும்.
குழுவின் அறிக்கையை சமர்ப்பித்தவுடன், உத்தியோகபூர்வ கடமைகளை மேற்கொள்ளும்போது ஏதேனும் தவறு அல்லது அலட்சியம் கண்டறியப்பட்டால், வீரர்கள் மற்றும்/அல்லது அதிகாரிகளுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிர்வாகக் குழு கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும்.
இதேவேளை, வீராங்கனை தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகளை அடுத்து, அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்த போது ஏனைய வீரர்களும் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் விளையாட்டு அமைச்சுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக விளையாட்டு அமைச்சின் செயலாளர் கலாநிதி அமல் ஹர்ஷத சில்வா தெரிவித்துள்ளார்.



