மேல்மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு https:// Wptaxi.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டம் முதலில் மேல் மாகாணத்தில் மாத்திரம் அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அதற்கான இணையத்தளத்தின் ஊடாக நாளை (1) முதல் பதிவு செய்து கொள்ள முடியும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.




