காதுக்குள் புகுந்த பூச்சியை வெளியேற்றுவது எப்படி?

Date:

யானை மிகப்பெரிய விலங்காக இருந்தாலும், அதன் காதுக்குள் சிறிய எறும்பு நுழைந்தால், அதோகதிதான். யானையின் நிலைமையே இப்படியென்றால், நாமெல்லாம் எம்மாத்திரம்… துடிதுடித்துப் போய்விடுவோம்.

காதுக்குள் பூச்சி புகுந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்… விளக்குகிறார் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் வேலுமணி.

“காதுக்குள் பூச்சியோ, எறும்போ நுழைந்துவிட்டால், காது நிறைய எண்ணெய் அல்லது உப்புக் கரைசலை ஊற்றிப் பார்க்கலாம்; அதனால், பூச்சியின் மூச்சு தடைப்பட்டு உடனடியாக இறந்துவிடும். அதை எளிதாக வெளியே எடுத்துவிடலாம். இது, எறும்பு மற்றும் சிறு பூச்சிகளுக்கு மட்டுமே பலனளிக்கும். பெரிய பூச்சிகள், வண்டுகள், உண்ணிகளை வெளியேற்ற உதவாது.

பெரிய பூச்சிகள் காதுக்குள் நுழைந்துவிட்டால், அவை காதிலுள்ள ஜவ்வுகளைப் பிடித்துக்கொண்டு உள்ளேயே தங்கிவிடும். சுய மருத்துவம் செய்யாமல் உடனடியாக காது, மூக்கு தொண்டை மருத்துவரைப் பார்ப்பது நல்லது. அட்வான்ஸ்ட் எண்டோஸ்கோப்பி சிகிச்சை மூலம் பூச்சியை வெளியே எடுத்துவிடலாம்.

குழந்தைகளின் காதுக்குள் பூச்சி நுழைந்தால், மயக்க மருந்து கொடுத்து எடுக்க வேண்டியிருக்கும். பட்ஸ் அல்லது வேறு ஏதேனும் ஒன்றைக் காதில் நுழைத்து, பூச்சியை எடுக்க முயலும்போது உள்காதிலுள்ள மென்மையான பகுதிகள் பாதிக்கப்படலாம், காதில் காயம் ஏற்படலாம்“ என்றார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

பேச்சுக்காக பாகிஸ்தான் புறப்பட்ட அமெரிக்க துணை ஜனாதிபதி

துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் அமெரிக்க தூதுக்குழுவினர், ஈரான் குறித்த...

ஈரான் யுரேனியத்தின் கதி என்னவாகும்?

சுமார் 10 அணு குண்டுகளைத் தயாரிக்கப் போதுமான அளவு அதிக செறிவூட்டப்பட்ட...

விஜய் வேட்புமனுவில் சொத்து மதிப்பை குறைத்துக் காட்டியது முறைகேடானது: உயர் நீதிமன்றம்

இரு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்