டென்மார்க்கில் பரவும் திரிவடைந்த வைரஸ் பாதித்த 3 பேர் கொழும்பில்!

Date:

டென்மார்க்கில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றிய மூவர் கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ ஜெயவர்தனபுரா பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

டென்மார்க் / ஈராக்கில் பரவி வரும் பி .1.428 வகை வைரஸ் தொற்றிற்குள்ளான மூவரே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட வைரஸ் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம் காணப்பட்டனர்.

இருவருமே கட்டாரில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்தபோது பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.

சப்புகஸ்கந்தை, பத்தரமுல்லை, மன்னார், யாழ்ப்பாணம் (1 மாதிரி), கொழும்பு மற்றும் கேகாலை வைரஸ் மாதிரிகள் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்ட பி .1.411 வைரஸ் வகையைச் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டது, ஆனால் சில வைரஸ் மாதிரிகளில் விலகல் இருப்பதாகவும் மேலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பாதிக்கப்பட்ட நபர்களின் மாதிரிகள் இந்த வாரம் பெறப்பட்டதாகவும், மேலும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட பி .1.1.7 வைரஸால் பாதிக்கப்பட்ட 07 பேர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 6 பேர் தனிமைப்படுத்தல் மையங்களை சேர்ந்தவர்கள். மற்றவர் மீனவர், சட்டவிரோதமாக கடல் வழியாக பொருட்களை கொண்டு சென்றதற்காக கைது செய்யப்பட்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்...

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்