பயிற்சிப் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை துஷ்பிரயோகம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட செவனகல பொலிஸ் பிரதேசத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தற்போது விடுமுறையில் இருக்கும் பொலிஸ் அதிகாரி, பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை நீண்டகாலமாக துன்புறுத்தி வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள், சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது. சந்தேக நபர் விடுமுறையில் சென்றுள்ளதாகவும், அவரது இருப்பிடத்தை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது.
வீரியத்தை அதிகரிக்கும் எனக்கூறி மேற்படி அதிகாரியினால் தனக்கு கஞ்சா கலந்து கொதிக்க வைத்த தண்ணீரை வழங்கியதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டள்ளது.
அந்த பொலிஸ் அதிகாரியும் கஞ்சா கசாயத்தை அருந்தியுள்ளார்.
செவனகலவில் இருந்து வேறொரு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னர், துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண்பொலிஸ் உத்தியோகத்தர், குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.




