அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டமொன்றில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறித்து முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச வெளியிட்ட விமர்சனக் கருத்துக்கள் நீதிமன்ற அவமதிப்புக்குரியனவா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு, லஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திடம் கோரியது.
இக்கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதம நீதவான், சர்ச்சைக்குரிய அந்தக் கருத்து குறித்து விரிவான விசாரணை நடத்தி, அது நீதிமன்ற அவமதிப்பாக அமைகிறதா என்பதைத் தீர்மானிக்குமாறு காவல்துறை மா அதிபருக்கு (IGP) உத்தரவிட்டார்.




