மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டியில், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மாணவன் யூ.எம்.பி. அப்துல்லா, 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் நீளம் பாய்தல் நிகழ்ச்சியில் வெண்கலப் பதக்கத்தை வென்று தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளார்.
மாகாண மட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் முன்னணி பாடசாலைகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில், சிறப்பான திறமையை வெளிப்படுத்திய யூ.எம்.பி. அப்துல்லா வெண்கலப் பதக்கத்தைப் பெற்று கல்முனை சாஹிரா தேசிய பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
மாகாண மட்டப் போட்டியில் பெற்ற இந்த வெற்றியின் மூலம் அவர் தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். இது அவரது விளையாட்டு வாழ்க்கையில் முக்கியமான முன்னேற்றமாகவும், பாடசாலையின் விளையாட்டுத்துறைக்கு கிடைத்துள்ள மற்றுமொரு சிறப்பாகவும் கருதப்படுகிறது.
வெற்றியீட்டிய மாணவன் யூ.எம்.பி. அப்துல்லாவுக்கு பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் ஏ.எம். அப்ராஜ் ரிலா மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் எம்.யூ.ஏ. ஷம்லி ஆகியோருக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.




