எம்பிலிபிட்டிய காகித ஆலையில் தீ விபத்து – பல தரப்பினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் கட்டுப்பாட்டுக்குள்

Date:

எம்பிலிபிட்டிய காகித ஆலையின் வளாகத்தில் கழிவுப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கில் இன்று (30) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பிற்பகல் சுமார் 3.20 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து காகித ஆலையின் தீயணைப்புப் பிரிவு, இலங்கை இராணுவம், பொலிஸார், எம்பிலிபிட்டிய நகர சபை மற்றும் செவனகல சர்க்கரை ஆலையின் தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தீ மேலும் ஆலையின் பிற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கும் வகையில் அதிகாரிகள் மற்றும் தீயணைப்புப் பிரிவினர் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

நீண்ட முயற்சிக்குப் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

எனினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

spot_imgspot_img

More like this
Related

குரலிலிருந்து கொள்கை நோக்கி: மட்டக்களப்பில் இளைஞர் தலைவர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான விசேட உரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான குரலிலிருந்து கொள்கை...

“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே?” – 11ஆவது வாரமாகவும் பலாலி மக்களின் போராட்டம்!

“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே… அது எப்படி உங்களுடையதாகும்?” – 11ஆவது வாரமாகவும்...

மதுபோதையில் வீட்டுக்குள் புகுந்து சேதம்; நெல்லியடியில் பிரதேச சபை உறுப்பினர் கைது

நெல்லியடி நகரில் உள்ள இளைப்பாறிய அரச உத்தியோகத்தரின் வீட்டிற்குள் மதுபோதையில் அத்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்